ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கைலி என்பவர், 6 ஆண்டுகள் காதலித்த தன் காதலரை திருமணம் செய்தார். இந்த திருமண விழாவும், புகைப்படங்கள் எடுத்த நிகழ்வுகளும் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன. ஆனால் அதே நாளில் ஒரு அதிர்ச்சி நிகழ்வு நடந்தது. அதாவது அவரது கணவர் திடீரென காணாமல் போனார்.

தனது திருமண இரவில் தனியாக இருந்த கைலி, கணவருக்கு பலமுறை மெசேஜ் அனுப்பியும், செல்போன் மூலம் அழைத்தும் பதிலளிக்கவில்லை. சில நாட்கள் கழிந்த பிறகு தான் உண்மை வெளிவந்தது. அவரது கணவர், ஒரு வேறு பெண்ணுடன் காதலில் இருந்துள்ளார். அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அந்த பெண் கைலியின் சொந்த உறவினர் என்பது.

இதனால் மனதளவில் பெரும் பாதிப்புக்கு ஆளான கைலி,  தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே பயமாக உள்ளது என்று சொல்லும் அளவுக்கு, அந்த அனுபவம் அவரது வாழ்நாளையே பாதித்துள்ளது. மேலும்