மும்பை இண்டியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் (MI vs CSK) இடையிலான ‘ஐபிஎல் எல் கிளாசிகோ’ மோதலில், ஒருவர் தனக்கென ஒவ்வொரு பார்வையாளரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் – அவர் தான் ஆயுஷ் மாத்ரே. மும்பையை சேர்ந்த இந்த இளம் வீரர், ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக, சென்னை அணியில் அவசர மாற்றமாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்காமல் இருந்தாலும், வான்கடே மைதானம் என்பது அவரது “சிறுவயது நினைவுகள் நிரம்பிய தாயகம்” என்பது உண்மை.

ஆயுஷ், மும்பை ரண்ஜி அணிக்காக 9 முதல்தர போட்டிகளில் பங்கேற்று 2 சதங்கள் மற்றும் 1 அரைசதம் விளாசியுள்ளார். மேலும், 7 லிஸ்ட் A போட்டிகளிலும் கலக்கியுள்ள இவர், நாகலாந்துக்கு எதிராக 181 ரன்கள், சௌராஷ்டிராவுக்கு எதிராக 148 ரன்கள் அடித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம், ஆண்கள் லிஸ்ட் A கிரிக்கெட்டில் 150 ரன்கள் தாண்டிய இளம் வீரராக சாதனை படைத்ததற்காக BCCI விருது வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

2014-ம் ஆண்டு வெளியான வெங்க்சர்கர் கிரிக்கெட் அகாடமி வீடியோவில், 6 வயது ஆயுஷ் பேட் பிடித்து விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவரது தாத்தா லக்ஷ்மிகாந்த் நாயக், “இவனுடைய பேட்டிங் திறமை சிறுவயதில் தெரிய வந்தது. அவன் பெரிய வீரனாகிறானா இல்லையா என்பது விதியின் விஷயம். ஆனால் நாம்அவனை தூண்டும் கடமையை செய்ய வேண்டும். அதனால்தான் வெங்க்சர்கர் அகாடமிக்கே அனுப்பினோம்,” என உருக்கமாக கூறுகிறார்.

இது பற்றி ஆயுஷ் கூறும்போது “நான் 6 வயதில் விளையாட தொடங்கினேன். ஆனால் என் உண்மையான கிரிக்கெட் பயணம் 10 வயதில் துவங்கியது,” என ஆயுஷ் கூறியுள்ளார். மட்டுங்காவில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் சேர்ந்ததும், அவருடைய தினசரி பயிற்சி, பள்ளிக்கல்வி, மற்றும் சர்ச்ச்கேட்டில் இரண்டாம் நிலை பயிற்சி – அனைத்தும் தாத்தா வழிகாட்டியதால் தான் சாத்தியம் ஆனதாம். “அவர்கள் என் தூக்கத்தை கெடுக்காதே என்றாலும், இன்று என் குடும்பமே எனது தியாகம் பலம் கொடுக்கிறது என்று உணர்கின்றனர்,” என அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.