
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியில் ஒரு ஆறு வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஜவகர் நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு பின்புறம் மாலை நேரத்தில் ஆறு வயது சிறுமி தன் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வந்து சாக்லேட் தருகிறேன் எனக்கூறி சிறுமியை கோவிலுக்கு பின்னால் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சிறுமி கத்தி கூச்சலிட்டதால் வாயில் உலர்ந்த இலைகளை திணித்து கற்கள் மற்றும் செங்கற்களால் தலையில் அடித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
பின்னர் அந்த சிறுமி இருந்து விட்டதாக நினைத்து அவர் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில் சிறுமி இரவு வரை வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் தேடினர். அப்போது சிறுமி கோவையின் பின்புறம் இரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரிய வந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறிய நிலையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஏற்கனவே குற்றவாளி மதுவுக்கு அடிமையானவர் எனவும் சந்தேகத்திற்குரிய பல பழக்க வழக்கங்கள் அவருக்கு இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.