பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் 20 வயது இளம்பெண் கூலிப்படையை ஏவி தனது கணவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுரங்காபாத் சேர்ந்த குஞ்சா தேவி என்ற இளம் பெண்ணுக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு பிரியான்சு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு முன்னரே தேவிக்கும் அவரது சொந்த மாமாவான ஜீவன் சிங்(55) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. இதனை அறிந்த பெற்றோர் தேவியை கட்டாயப்படுத்தி பர்வான் கிராமத்தைச் சேர்ந்த பிரியான்சு(25) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இதனால் கணவரை கொலை செய்துவிட்டு மாமாவுடன் வாழ ஆசைப்பட்ட தேவி கடந்த 25ஆம் தேதி தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி பிரியான்சு தனது தங்கை வீட்டிற்கு சென்று விட்டு ரயிலில் பயணித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அவர் நவிநகர் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை வீட்டுக்கு அழைத்து வர பைக்கில் யாரையாவது அனுப்புமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரியான்சுவை வழிமறித்த இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டு அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

இந்த வழக்கில் தேவி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ஜீவன் சிங்கை தேடி வருகின்றனர். தேவி தனது மாமா ஜீவன் சிங்குடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியது தெரியவந்துள்ளது.

ஜீவன் சிங் கொலையாளிகளுடனும் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். சில ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து உக்கார நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் இதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.