தென்காசி மாவட்டம் ஊத்துமலை ஜே ஜே நகர் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மதன்(21) பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக மதனும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். சமீபத்தில் பெண் வீட்டார் மதனை அழைத்து மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த மதன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மதனை வீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் மதனின் பெற்றோரும் உறவினர்களும் ஊத்துமலை ஆரம்ப அரசு சுகாதார நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.