
ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது பெரிய ரன்கள் சேஸை வெற்றிகரமாக சாதித்து, Sunrisers Hyderabad (SRH) அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி வைத்த 246 ரன்கள் இலக்கை, ராஜீவ் காந்தி இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் SRH அணி வெற்றிகரமாக கடந்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் அபிஷேக் சர்மா. அவர் வெறும் 40 பந்துகளில் சதம் அடித்து பல சாதனைகளை முறியடித்தார். SRH அணிக்காக மிக உயர்ந்த தனிப்பட்ட ஸ்கோர் அடித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.
abhishek sharma’s mother kissing kavya maran’s hand😍#SRHvsPBKS pic.twitter.com/KwArSSkTjA
— 🐐 (@itshitmanera) April 12, 2025
இந்த போட்டியை நேரில் பார்த்த SRH உரிமையாளர் கவ்யா மாறன் மற்றும் அபிஷேக் சர்மாவின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தனர். அபிஷேக் சர்மாவின் அம்மா, தனது மகனைப் பாராட்டி, அருகில் உட்கார்ந்திருந்த கவ்யா மாறனின் கைகளை முத்தமிட்ட காட்சி, ரசிகர்களிடையே பெரும் வைரலாக பரவி வருகிறது. SRH அணி மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் சேர்ந்து இந்த போட்டியில் வெற்றியின் மிகப்பெரிய நாயகர்களாக மாறினர். மேலும் இறுதியில் பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது.