தமிழகத்தில் மகப்பேறு காலத்தில் குழந்தை இறப்பு விகிதத்தை பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வரும் பொருட்கள் நான்கு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இது பற்றி அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது, அனைத்து குழந்தைகளுக்கும் பிறவி குறைபாடுகளை கண்டறிய ஆயிரம் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் குழந்தைகளுக்கு பிரத்தியேக அடையாள அட்டை வழங்கப்படுவதோடு 400 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நலம் கண்காணிக்கப்படும்.

இதன் மூலம் குழந்தைகளுக்கும் பிறவி குறைபாடுகளை கண்டறிந்து தீர்வு காண முடியும். இந்த திட்டங்கள் வளர்ச்சி குறைபாடுகள், சரித்திரம் குறைபாடுகள், பார்வை குறைபாடுகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் குறை பிரசவம் மற்றும் எடை குறைவான பச்சிளம் குழந்தைகளை தொடர்ந்து அவரது இல்லங்களிலேயே தொழில்நுட்ப உதவியோடு கண்காணிப்பதற்கான முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக சுமார் 1.28 கோடி ரூபாய் செலவில் கருவிகள் கொள்முதல் செய்யப்படும். சுகப்பிரசவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய மருத்துவ முறையுடன் ஒருங்கிணைந்து செவிலியர்களுக்கு விரிவான மகப்பேறு பராமரிப்பு குறித்த பயிற்சி 1.74 கோடி ரூபாய் செலவில் துவங்கப்படும். மேலும் ஆரம்ப கால குழந்தை வளர்ச்சிக்கான பெற்றோர் பயன்பாடு செயலி தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த செயலி மூலம் சுகாதாரம், கர்ப்பிணியர், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தகவல்கள், கர்ப்பம், பிரசவ கால தகவல்கள், குழந்தை பராமரிப்பு, தாய்ப்பால் முக்கியத்துவம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் என அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.