மத்திய பிரதேசம் மாநிலம் குழந்தை 3 வயது சிறுமி வசித்து வருகிறார். பிறக்கும் போதே குழந்தையின் கழுத்தின் பின்பகுதியில் ஒரு கட்டி இருந்தது. வளர வளர அந்த கட்டி கை போன்று வளர தொடங்கியது.

இதனால் அந்த குழந்தையை பெற்றோர் போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அப்போது மண்டை ஓடு மற்றும் தண்டுவடத்தை ஒட்டியவாறு வளர்ச்சி அடையாத ஒரு உடல் பகுதி இருப்பது தெரியவந்தது.

இந்த உறுப்பு மூளையின் மிக நுட்பமான பகுதியான மூளை தண்டுடன் ஒட்டி கொண்டிருந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தனர்.

சுமார் 7 மணி நேர அறுவை சிகிச்சை பிறகு மூளை மற்றும் கழுத்துடன் இணைந்து இருந்த கை போன்ற உடல் உறுப்பை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். தற்போது குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.