குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. வக்பு வாரிய மசோதா, யுஜிசி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று இரு அவைகளின் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றியுள்ளார்.

அவர் கூறியதாவது, 3 கோடி குடும்பங்களுக்கு இலவச வீடு கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு நாட்டின் வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகள் எடுக்கும். 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு காப்பீடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களின் கல்வி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவுகளை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது.