சென்னை மாவட்டம் ஓட்டேரி குளக்கரை சாலை பகுதி சேர்ந்தவர் அவினாஷ். இவரது மனைவி உஷா. இந்த தம்பதியினருக்கு 2 ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருந்தனர். நேற்றைய தினம் உஷா தனது 3 குழந்தைகளுடன் கட்டிலில் படித்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அவினாஷ் கீழே தூங்கினார். நேற்று காலை உஷா எழுந்து பார்த்தபோது 2-வது மகனான நகுலேஸ்வரன்(2 1/2 வயது) கட்டிலில் இருந்து கீழே விழுந்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உஷா உடனடியாக தனது மகனை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கீழே விழுந்து மூச்சு திணறி இறந்திருக்கலாம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.