
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இவர் கடந்த 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலும் 2009 முதல் 2014 வரையிலும் இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார். இவருக்கு தற்போது 92 வயது ஆகிறது. இந்நிலையில் மன்மோகன் சிங்குக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு ராணுவ அதிகாரிகள் முப்படை தளபதி ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்டார் இறுதி மரியாதை செலுத்தினார் அதன் பிறகு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.