
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் அதிமுக மற்றும் திமுக என்ற சூழல் இருந்து வருகிறது. இதனை மாற்றுவதற்கு தற்போது பாஜக முயற்சி செய்து வருகிறது.
அதாவது இரண்டாம் இடத்தில் இருக்கும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாம் இடத்திற்கு வர முயற்சி செய்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலை கண்டிப்பாக பாஜக தனித்து சந்திக்காது. அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு அதிமுக தான். மேலும் அதற்கான முயற்சிகளை பாஜக செய்து வருவதாக கூறினார்.