தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் மாதவன் நடிப்பில் அன்பே சிவம் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் அப்போது வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த படத்தை புகழாதவர்கள் இல்லை என்றே கூறலாம். இந்நிலையில் நடிகை குஷ்பூ ஒரு பேட்டியில் அன்பே சிவம் திரைப்படம் தோல்வியடைந்ததால் என்னுடைய கணவர் 2 வருடங்கள் வீட்டில் சும்மாதான் இருந்தார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதாவது தற்போது அன்பே சிவம் பாடத்தை புகழ்ந்தவர்கள் அப்போது தியேட்டருக்கு சென்று பார்த்திருந்தால் படம் நன்றாக ஓடி இருக்கும். ஆனால் எது நடந்தாலும் நன்மைக்கே என்று நாங்கள் எடுத்துக் கொள்வோம். அந்தப் படத்துக்கு பிறகு தான் நாங்கள் அவ்னி கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினோம். ஒருவேளை அந்த படம் வெற்றி பெற்றிருந்தால் நாங்கள் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்க மாட்டோம். எனவே அது கூட ஒரு வகையில் நல்லது தான். மேலும் என்னுடைய கணவர் சுந்தர் சி அன்பே சிவம் படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்தார் என்று கூறியுள்ளார்.