
பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் உலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது. அந்நாட்டின் கையிருப்பு தொகை தீரும் நிலையில் உள்ளதை அறிந்த நட்பு நாடான சீனா 19 ஆயிரத்து 600 கோடி கடனாக வழங்கியுள்ளது. ஆனால் இதில் நிபந்தனைகளும் உள்ளது.
அடுத்து இரண்டு வருடங்களில் கொடுத்த கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்றும் அதற்கு வட்டியும் போடப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் நிதி மந்திரி இஷாக் தர் கூறியுள்ளார். சமீபத்தில் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.