
கர்நாடக மாநிலம் பெங்களூர் ஹரிணி இவருக்கு 33 வயது ஆகிறது. அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஹரணிக்கும் யஷாஸ்(25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இந்த நிலையில் ஹரணி பெங்களூரில் இருக்கும் ஹோட்டல் அருகில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் ஹரிணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் யஷாசை கைது செய்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தனது கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்ததால் உறவை முறித்துக் கொள்ள ஹரிணி முடிவு செய்தார்.
சம்பவம் நடந்த அன்று ஹரிணி ஹோட்டல் அறையில் யஷாசை சந்தித்து இந்த உறவை தொடர முடியாது என கூறியதால் தகராறு ஏற்பட்டது. இதில் கோபத்தில் அவர் ஹரிணியை கத்தியால் 17 முறை குத்தி கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.