மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் ரோகித் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர் ரோகினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தனர். ஒரு நாள் திடீரென ரோகிணி காணாமல் போய்விட்டார். இதனால் ரோஹித் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. தனது தாய்க்கு உடம்பு சரியில்லை என கூறிவிட்டு சென்ற ரோகிணி வீட்டிற்கு வராததால் ரோகித் அங்கு சென்று பார்த்தார். அங்கு ரோகினி இல்லை.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ரோகினி ராகுல் என்பவரை திருமணம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 8 வருடமாக முதல் கணவர் ரோகித்துக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்தது. இதனால் தான் கணவருடன் வாழ விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியதாக ரோகினி கூறியுள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த ரோகித் தன்னுடன் வாழ வருமாறு ரோகினியை அழைத்தார்.
அப்போது ரோகித்துக்கும் ராகுலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் பிரச்சனையை சுமூகமாக முடிக்க நினைத்தனர். ரோகினி தனது முதல் கணவருடன் செல்ல மாட்டேன். இரண்டாவது கணவருடன் செல்வதே விருப்பம் என உறுதியாக கூறினார். விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்வது சட்டவிரோதமானது என போலீசார் அறிவுரை கூறினார்கள். விரைவில் முதல் கணவரை விவாகரத்து செய்து விடுவதாக ரோகினி உறுதி அளித்தார். அதன் பிறகு போலீசார் ரோகினியை அவரது இரண்டாவது கணவர் ராகுலுடன் அனுப்பி வைத்தனர். கடைசிவரை மனைவி வந்து விடுவாள் என எதிர்பார்த்த ரோகித்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது.