நொய்டாவில் உள்ள ஒரு பகல்நேர பராமரிப்பு மையத்தில் 15 மாத குழந்தையை  பணிப்பெண் ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவியில் பதிவான காட்சிகளில், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்த போதிலும், பணிப்பெண்  பலமுறை அடித்து தரையில் தள்ளியது தெளிவாக காணப்பட்டது.

குழந்தையின் பெற்றோர் இந்த காட்சிகளை பார்த்ததும், உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட பணிப்பெண் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. அன்றைய தினம், குழந்தையை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற தாய், அவள் தொடர்ந்து அழுவதைக் கண்டு கவலையடைந்தார். உடையை மாற்றும் போது, குழந்தையின் இரு தொடைகளிலும் வட்ட வடிவ அடையாளங்கள் இருப்பதை கவனித்த அவர், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். பரிசோதனையில், அவை மனிதன் கடித்த காயங்களாக இருக்கலாம் என மருத்துவர் உறுதிப்படுத்தினார்.

“>

 

பின்னர் பெற்றோர்கள் பகல்நேர பராமரிப்பு மையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பணிப்பெண் முதலில் குழந்தையை சமாதானப்படுத்த முயன்றாலும், தொடர்ந்து அழுததால், அறைக் கதவை மூடி, தரையில் இறக்கி, அறைந்து, கடித்து, பிளாஸ்டிக் மட்டையால் அடித்ததும் பதிவாகியுள்ளது.

“>

 

பெற்றோர்கள், பகல்நேர பராமரிப்பு மையத்தின் தலைமை அலட்சியமாக நடந்துகொண்டதோடு, குழந்தையை பாதுகாப்பதில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பணிப்பெண் மற்றும் மையத்தின் பொறுப்பாளர் இருவரும் தாக்குதல் குறித்து கேட்கப்பட்டபோது, தவறான வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தல்களுடன் பதிலளித்ததாகவும் கூறினர்.

இந்த விவகாரம் குறித்து செக்டர்-142 காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. குழந்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு காயங்கள் ஆவணப்படுத்தப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட பணிப்பெண் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.