தென்கொரியாவில் ராணுவ அதிகாரியாக இருப்பவர் ஓ.யோஹான். இவர் மீண்டும் புதிதாக 24 மணி நேரத்தில் 11,707 புல்- அப்ஸ் எடுத்துள்ளார். இதன்மூலம் மீண்டும் அவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 28, 29-ம் தேதி அன்று இன்சியோனில் நடந்தது.

 

 

View this post on Instagram

 

A post shared by Guinness World Records (@guinnessworldrecords)

கடந்த 2019ம் ஆண்டில் தனது ராணுவ பணியின் போது இதற்கான பயிற்சியை தொடங்கிய இவர் கடுமையான உழைப்பால் இந்த சாதனையை படைத்துள்ளார். இவர் தனது 707வது சிறப்பு பயண பிரிவுக்கு இந்த சாதனையை அர்ப்பணித்து உள்ளார்.

இதற்கு முன்னதாக 8707 புல்-அப்ஸ் எடுத்து சாதனை படைத்த இவர் ஒரு வாரத்திற்குள் மற்றொரு போட்டியாளரால் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. இதனால் மீண்டும் இந்த மாபெரும் 11, 77 என்ற எண்ணிக்கையை எட்டி உலக சாதனை படைத்துள்ளார்.