
தென்கொரியாவில் ராணுவ அதிகாரியாக இருப்பவர் ஓ.யோஹான். இவர் மீண்டும் புதிதாக 24 மணி நேரத்தில் 11,707 புல்- அப்ஸ் எடுத்துள்ளார். இதன்மூலம் மீண்டும் அவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 28, 29-ம் தேதி அன்று இன்சியோனில் நடந்தது.
View this post on Instagram
கடந்த 2019ம் ஆண்டில் தனது ராணுவ பணியின் போது இதற்கான பயிற்சியை தொடங்கிய இவர் கடுமையான உழைப்பால் இந்த சாதனையை படைத்துள்ளார். இவர் தனது 707வது சிறப்பு பயண பிரிவுக்கு இந்த சாதனையை அர்ப்பணித்து உள்ளார்.
இதற்கு முன்னதாக 8707 புல்-அப்ஸ் எடுத்து சாதனை படைத்த இவர் ஒரு வாரத்திற்குள் மற்றொரு போட்டியாளரால் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. இதனால் மீண்டும் இந்த மாபெரும் 11, 77 என்ற எண்ணிக்கையை எட்டி உலக சாதனை படைத்துள்ளார்.