உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மூதாட்டியை கீழே தள்ளிய தலைமை காவலர் ஜெயச்சந்திரனை கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.  சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி தனது பேரனான படையப்பா (25) என்பவருடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்குள்ள காவலர் அறையில் படையப்பாவுக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 3 பெண்களுக்கும் படையப்பாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது

இதனால் ஏற்பட்ட கைகலப்பில் தலைமைக் காவலர் ஜெயச்சந்திரன், படையப்பாவை இழுத்து தள்ளும் போது, பாட்டி சின்னப்பொண்ணுவையும் கீழே தள்ளியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலானது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.  தலைமைக் காவலர் ஜெயச்சந்திரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.