
மேகலாயாவிலுள்ள சில்லாங் பகுதிக்கு ஹனிமூன் சென்ற போது கணவனை தீர்த்து கட்டிய சோனம் வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜா ரகுவன்சி என்பவருக்கு சோனம் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இதில் சோனத்திற்கு ஏற்கனவே தன்னுடைய அப்பாவின் கடையில் வேலை பார்த்து வந்த ஒரு வாலிபரை காதலித்தார்.
இதனால் தான் தன் காதலனுடன் சேர்ந்து 20 லட்ச ரூபாய்க்கு கூலி ஆட்களையே ஏவி கணவனை தீர்த்து கட்டியுள்ளார். இந்த கொலை வழக்கில் சோனம், அவரது கள்ளக்காதலன் ராஜ் குஷ்வாகா உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தினசரி இந்த வழக்கில் புதிய தகவல்கள் வெளிவந்து பபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சோனத்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது அவர் மிகவும் பயந்திருந்ததாகவும் உடல் சோர்வான நிலையில் இருந்ததாகவும் டாக்டர்கள் கூறியதோடு அவருக்கு எனர்ஜி ட்ரிங்க் வழங்கினர்.
அதன் பிறகு கர்ப்ப பரிசோதனை செய்யப்பட்டதாகவும் ஆனால் அதன் முடிவு தெளிவாக இல்லை எனவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும் நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.