
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் தலா 44 ரன்கள் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 41 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 87 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்த போட்டியின் மூலம் ஸ்ரேயஸ் ஐயர் மகத்தான சாதனையைப் படைத்துள்ளார். அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லி அணியையும், 2025 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியையும் தற்போது நடப்பு சீசனில் பஞ்சாப் அணியையும் இறுதிப்போட்டிக்குள் அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். இதில் கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்காக கோப்பையையும் வென்று கொடுத்தார்.
மேலும் மூன்று வெவ்வேறு அணிகளை கேப்டனாக இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ள நிலையில் இதுவரை எந்த வீரரும்ம் இப்படி ஒரு சாதனையைப் படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்..