
சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் முன்னாள் பாஜக நிர்வாகி. இவர் தன்னை மாநகராட்சி ஆணையர் என போலி கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர் மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இவர் தன்னை மாநகராட்சி ஆணையர் எனவும் உங்களுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் எனவும் பல நபர்களிடம் கூறி மோசடி செய்துள்ளார். இதுவரை 22 நபர்களிடம் வேலை வாங்கித் தருவதாக என கூறியுள்ளார். அதனை நம்பியவர்கள் ஜெயச்சந்திரனிடம் பணம் கொடுத்துள்ளனர்.
இதுவரையில் ரூபாய் 1.5 கோடிக்கு மேல் பணம் வாங்கிய ஜெயசந்திரன் வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயசந்திரன் உட்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் லதா, கௌரி, வெங்கடேஷ் என 3 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.