சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரு.மாணிக்கம் திரைப்படத்தை பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது, ஒரு நல்ல படத்துக்கு அடையாளம் படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள் கதாபாத்திரங்கள், ஒரு மூன்று நான்கு நாட்கள் ஆவது நினைவில் வந்து கொண்டே இருக்கணும். அந்த படத்தில் வரும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் நம் வாழ்க்கையில் நாமும் கடைபிடிக்கணும் என்ற எண்ணம் உருவாகும்.

அந்த மாதிரி சமீபத்தில் நான் பார்த்த திரு.மாணிக்கம் என்ற படம் ஒரு அற்புதமான படைப்பு. உண்மை சம்பவத்தை வைத்து திரைக்கதை ,வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கி இருக்கும் நந்தா பெரியசாமி அவர்கள் தான் ஒரு அற்புதமான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

இந்த திரைப்படம் இவ்வளவு சிறப்பாக உருவாக பணியாற்றி இருக்கும் மைனா சுகுமார், விஷால் சந்திரசேகர், குணா ரவி அவர்களுக்கும், கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் எனது அருமை நண்பர் சமுத்திரக்கனி, மதிப்பிற்குரிய பாரதிராஜா மற்றும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் இந்த படத்தை தயாரித்திருக்கும் G.P ரவிக்குமார் மற்றும் என்னுடைய அருமை நண்பர் லிங்குசாமி மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என கூறியுள்ளார்.