
விருதுநகரில் இருந்து சிவகாசிக்கு ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோமிருந்து கொரியர் சர்வீஸ் வேன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் செல்வம்(46), அவரது மகள் சுமித்ரா(18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வேன் ஓட்டுனரான உதயகுமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.