இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஐ.ஐ.டி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. அங்கு பயோ மெக்கானிக்கல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்து மாணவன் கல்லூரியின் விடுதியிலேயை தங்கி படித்து வந்துள்ளார். நேற்று மாணவன் தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்காததால் சக மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி கல்லூரி நிர்வாகத்தினர் விரைந்து வந்து அறையின் கதவை திறக்க முயற்சித்தும் அவர்களால் முடியவில்லை. எனவே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது மாணவர் படுக்கையில் அசைவில்லாமல் கிடந்துள்ளார். தரையில் அவர் வாந்தி எடுத்ததற்கான அடையாளங்கள் இருந்தது. எனவே உடனடியாக மருத்துவரை வரவழைத்து மாணவனை சோதனை செய்தபோது மாணவர் உயிரிழந்ததாக தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு தடவியல் நிபுணர்களை வரவழைத்து மாணவரின் அறையை சோதனை செய்தனர். இதுகுறித்து சக மாணவர்களிடம் விசாரித்த போது கடந்த திங்கட்கிழமை இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்ற மாணவன் யாருடனும் பேசவில்லை.

மற்ற மாணவர்கள் யாரும் அவரை பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. மாணவரின் உடலில் எவ்வித காயங்களும் இல்லை. எனவே மாணவர் உயிரிழந்ததிற்கான காரணம் எதுவும் சரியாக தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே மாணவர் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறனர். இந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.