
பாகிஸ்தானில் புதிதாக திறக்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட துணிகள் மற்றும் பொருட்கள் விற்கும் ஒரு மால், திறக்கப்பட்ட 30 நிமிடங்களுக்குள் மக்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருட்களின் விலை இந்திய மதிப்பில் ரூ.15 என மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், மால் நிர்வாகிகள் கதவை அடைக்க முயன்றனர். ஆனால், கோபமடைந்த மக்கள் கண்ணாடி கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, பொருட்களை அள்ளிக்கொண்டு சென்றனர்.
பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகத்தான் விலை குறைவான பொருட்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனாலும் மக்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
A Huge Mall Dream Bazar was built by a Pak foreign businessesman in Karachi, Pakistan- On it’s inauguration yesterday he offered special discount for Pakistani locals….. and the whole Mall was looted pic.twitter.com/ah4d2ULh3l
— Megh Updates
™️ (@MeghUpdates) September 1, 2024