
பூமியிலிருந்து 3000 ஒளி ஆண்டுகள் தொலைவில் டி கொரோனே பொரியாலிஸ் என்ற விண்மீன் தொகுப்பு அமைந்துள்ளது. அந்த தொகுப்பில் இருக்கும் ஒரு நட்சத்திரம் விரைவில் வெடித்து சிதறும். அதனை இரவில் வெறும் கண்களால் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஒளி மாசுபட்ட நகரங்களில் இருந்தும் கூட வெறும் கண்ணால் அந்த நட்சத்திரம் வெடிக்கும் பிரகாசமான காட்சியை பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து நாசா விஞ்ஞானி ரெபக்கா ஹவுன்செல் கூறியதாவது, வாழ்நாளில் இது ஒரு முறை நடக்கும் நிகழ்வு. இது நிறைய புதிய வானியலாளர்களை உருவாக்கும் என நான் நம்புகிறேன். கடந்த 1946-ஆம் ஆண்டு கடைசியாக அந்த நட்சத்திரம் வெடித்தது. அந்த வெடிப்பு நடந்ததற்கு சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு அந்த அமைப்பை மங்கலானது. அதே போல கடந்த ஆண்டு சம்பந்தப்பட்ட நட்சத்திரத்தின் அமைப்பு மீண்டும் மங்கலானது. இதனால் இந்த ஆண்டு அந்த நட்சத்திரம் மீண்டும் வெடிக்கும். வருகிற செப்டம்பர் மாதம் இந்த ஆச்சரிய நிகழ்வு நடக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.