
10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரிசுகளை வழங்கியுள்ளார். இந்த பரிசளிப்பு விழா மாமல்லாபுரம் அருகே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கல்வி விருது வழங்கும் விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசியதாவது, சாதி மதத்தை வைத்து பிரிவினை வளர்க்கும் சிந்தனை பக்கம் போய்விடாதீர்கள். உங்கள் எண்ணத்தை பாதிக்க அனுமதிக்காதீர்கள். விவசாயிகள் சாதி, மதம் பார்த்து பொருளை விளைவிப்பதில்லை.
தொழிலாளர்கள் சாதி மதம் பார்த்து உற்பத்தி செய்வதில்லை. வெயில் மழையில் எல்லாம் சாதி மதம் இருக்கிறதா? போதை பொருட்களை அறவே ஒதுக்கியது போல சாதி மதத்தையும் தூரம் ஒதுக்குவது நல்லது. ஜனநாயக கடமையை சரியாக செய்வது என்பது பெரிய விஷயம் அல்ல. சாதாரண விஷயம் தான்.
நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இதுவரை ஊழலை செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள். நீட்டை தாண்டி இந்த உலகம் மிகவும் பெரியது. அதில் நீங்கள் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என பேசியுள்ளார்.