இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் 36 வயதான இவர் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வருகிறார். தற்போது நடைபெற்ற ஐபிஎல் தொடரோடு இந்த சீசன் கிரிக்கெட் முடிவடைகிறது. அதன் பிறகு ஐசிசி உலக கோப்பை சாம்பியன்ஷிப்பிற்கான போட்டி தொடங்க உள்ளது.  அதன் பிறகு 2027 ஆம் வருடம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயார் படுத்தும் பணியில் ஈடுபட உள்ளது. இதற்கிடையில் 36 வயதான விராட் கோலியை மேலும் இரண்டு வருடத்திற்கு அணியில் வைத்திருக்குமா? அல்லது விராட் கோலி ஓய்வு முறையை அறிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.

ஐசிசி சாம்பியன் டிராபி வென்ற பிறகு பிசிசிஐ விராட் கோலிக்கு அதிக நெருக்கடி கொடுக்காது என்றும் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் நிலையில் பிசிசிஐ- யின் மத்திய ஒப்பந்தத்தில் a + பிரிவில் விராட் கோலி நீட்டிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விராட் கோலி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தற்போது இருக்கும் நிலையில் உங்களுடைய அடுத்த பெரிய இலக்கு என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அடுத்த பெரிய இலக்கா? எனக்கு தெரியவில்லை ஒரு வேளை 2027 ஆம் வருடம் நடைபெறும் உலக கோப்பையை வெல்ல முயற்சி செய்வதாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளா.ர் இதனால் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.