
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் படுவூர் காட்டுவிளை பகுதியில் டார்வின் (46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பபிதா நித்திய செல்வி (39) என்ற மனைவியும், பென்குரூஸ் (9, டிக்ஸ்மெரின் (7) ஆகிய இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் மூத்த மகன் ஒரு மன வளர்ச்சி குன்றிய பள்ளியில் தங்கி படித்து வந்தான்.
இளைய மகன் பாட்டி வீட்டிற்கு சென்று தங்கிய நிலையில், டார்வின் மற்றும் அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் இருந்து இரவு வரை அவரது வீட்டில் இருந்து யாருமே வெளியே வராத நிலையில் இரவு நேரம் ஆககயும் லைட் எதுவும் போடவில்லை.
இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வீட்டிற்குள் பார்த்தபோது பபிதா நித்திய செல்வி வீட்டில் பிணமாக கிடந்ததும் அவரது கணவன் அங்கு உட்கார்ந்திருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பபிதா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அதிகாலையில் கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்தில் டார்வின் தன்னுடைய மனைவியை கழுத்தை நெரித்து, ஒரு துணியால் கழுத்தை நெறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பின்னர் தன் மனைவியின் உடலை என்ன செய்வதென்று தெரியாமல் அவர் ஒரு நாள் முழுவதும் பிணத்துடன் வீட்டிற்குள் அமர்ந்துள்ளார். அவர் பிணத்தை வெளியே எங்காவது கொண்டு சென்று மறைத்து விடலாமா என பலவாறு யோசிச்சு பித்து பிடித்தவாறே இடத்தில் அமர்ந்திருந்த நிலையில் இரவு நேரத்தில் இதனை பிணத்தை மறைக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அதற்குள் அவர் போலீஸிடம் சிக்கிவிட்டார். இது பற்றி அவரிடம் கேட்டபோது வீட்டோடு மாப்பிள்ளையாக வந்ததால் மரியாதை கொடுக்கவில்லை. இதனால் தன் மனைவியை கோபத்தில் கொலை செய்ததாக கூறினார். மேலும் டார்வினை தற்போது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.