அசாம் மாநிலத்தில் மவுசுமி கோகாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை பூபென் தாஸ் என்பவர் காதலித்து வந்துள்ளார். இவர் தான் காதலித்த பெண்ணை வீட்டிற்கு வெளியே திடீரென கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறும் போது, ஆன்லைனில் வாகனம் ஒன்றினை முன் பதிவு செய்துவிட்டு கோகாய் தன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த தாஸ் தான் வைத்திருந்த கத்தியால் அவரை கொடூரமாக குத்தினார்.

இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தாஸை பிடித்தனர். ஆனால் அவர் தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் அவரை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதற்கு முன்னதாக கோகாய் தன் உயிருக்கு பூபென் தாசால் ‌ அச்சுறுத்தல் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.