திருநெல்வேலி மாவட்டம் உவரி குட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவராம்(51). இவர் பேக்கரியில் ஸ்வீட் செய்யும் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி சம்பவம் நடந்த அன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

திரும்பி வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து மகேஸ்வரி வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 7 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை திருட போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மகேஸ்வரி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது சிவராம் வீட்டிற்கு அருகே உள்ள லிங்கம் என்பவரின் வீட்டிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அவர் சென்னையில் வசித்து வருகிறார்.

இவரது வீட்டில் திருட்டு நடந்துள்ளதா இல்லையா என்பது அவர் வந்த பிறகே தெரியும் என போலீசார் கூறினர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.