
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 11 பெண்கள் பணத்தை எடுத்துக்கொண்டு கள்ளகாதலனோடு ஓடிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களாலும் வீடுகள் கட்டித்தரப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.2.40 லட்சம் பணம் தவணை முறையில் வழங்கப்படும்.
இந்த நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தின் மகாராஜ்கன்ஞ் என்ற பகுதியில் 2,350 பேருக்கு இந்த தொகையானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் தவணையாக ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த 11 பெண்கள் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு கணவனை விட்டுவிட்டு தங்களுடைய கள்ளக்காதலனுடன் ஓடிச்சென்றுள்ளனர்.