தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வணங்கான். இந்த படத்தின் வெற்றியைக் கொண்டாட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாவிடம் பத்திரிக்கையாளர்கள் பல கேள்விகளை கேட்டுள்ளனர்.

அதில் ஒரு கேள்வியாக அவன் இவன் படத்தில் விஷால் கண்களை மாற்றி நடித்தது தான் அவரது உடல்நிலை மோசமாவதற்கு காரணம் என்று கூறப்படுவதாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பாலா “இதற்கு என்ன பதில் கூறுவது?

மருத்துவ சான்றிதழ் ஏதாவது வாங்கி கொடுக்கலாமா? யாரோ சொன்னார்கள் நான் விஷாலின் கண்களை சேர்த்து தைத்து விட்டேன் என்று, அதெல்லாம் எப்படி முடியும்? யார் யாருக்கு என்னென்ன தோன்றுகிறதோ அதை எல்லாம் பேசுவார்கள். அவற்றையெல்லாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை.