
சமீபகாலமாகவே கிரிக்கெட் வீரர்கள் விவகாரத்தை பெரும் செய்தியானது தொடர்ந்து வர ஆரம்பித்திருக்கிறது. ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி என அடுத்தடுத்து பல கிரிக்கெட் வீரர்களின் விவகாரத்து செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது சஹல் விவகாரத்தை பெற்று இருப்பது ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படி கிரிக்கெட் வீரர்கள் அடுத்தடுத்து விவகாரத்து செய்து வரும் நிலையில் விவகாரத்து செய்த வீரர்களை வைத்து உருவாக்கப்பட்ட உலக 11 அணி என்று கூறி ஒரு அணியை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
அதில் விவகாரத்து பெறாத ஒரு வீரரின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில் அவருடைய மனைவி அந்த பதிவை பகிர்ந்து தன்னுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளார். அதாவது விவாகரத்து பெற்ற 11 கிரிக்கெட் வீரர்கள் அணியில் ஓபனர்கள் இடங்களில் ஷிகர் தவான், முகமது அசாருதீன் பெயர்கள் உள்ளது. மிடில் வரிசையில் வினோத் கம்ப்ளி, ரவி சாஸ்திரி, ஹர்திக் பாண்டியா பெயர்களும் உள்ளன. கேப்டனாகவும் விக்கெட் கீப்பர் ஆகவும் தினேஷ் கார்த்திக் பெயர் உள்ளது. இவர் முதல் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு இருக்கிறார்.
ஆல் ரவுண்டர் இடங்களில் ஆல்-ரவுண்டர்கள் இடங்களில் அனில் கும்ளே, ஷேன் வார்னே ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் இடங்களில் ஜவகல் ஶ்ரீநாத் மற்றும் முகமது ஷமி ஆகியோரது பெயர்கள் உள்ளன. இம்பாக்ட் வீரர் இடத்திற்கு யுஜ்வேந்திர சஹலை சேர்த்துள்ளனர். இந்த லிஸ்டில் வசீம் அக்ரம் பெயரும் இடம் பெற்றிருப்பதால் அவருடைய மனைவி இந்த பதிவை பகிர்ந்து இது முற்றிலும் தவறான தகவல் என்று பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.