கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களது 3 வயது மகன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென வந்த தெரு நாய் குழந்தையின் தலை, முகம், கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடித்து குதறியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தெரு நாயை விரட்டி குழந்தையை மீட்டனர். பின்னர் பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குழந்தைக்கு தையல் போடப்பட்டது.

தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை வளர்ப்பு நாய் கடித்துக் சம்பவத்தின் சிசிடிவி சோசியல் மீடியாவில் வைரலானது. தற்போது 3 வயது குழந்தையை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.