கள்ளக்குறிச்சி மாவட்டம் மையனூர் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனது விவசாய கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அதேசமயம் அப்பகுதியில் ஒரு டிராக்டர் இயக்க நிலையில் இருந்தது. அதில் ராஜ், ஷெரிப்(14), டேனிஷ்(7) ஆகிய மூன்று பேரும் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டரின் கியரை சிறுவர்கள் இயக்கியதாக தெரிகிறது. இதனால் பின்னோக்கி வந்த டிராக்டர் கிணற்றுக்குள் விழுந்தது. உடனே நீச்சல் தெரிந்த இரண்டு சிறுவர்கள் வெளியே வந்தனர்.

ஆனால் டேனிஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கிணற்று தண்ணீரை வெளியேற்றி டேனிஷின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.