சென்னை மாவட்டம் ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் அரவிந்த் ரவிச்சந்திரன். இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். கடந்த ஒன்பதாம் தேதி அரவிந்த் ரவிச்சந்திரன் ஆடி காரில் விழுப்புரம் நோக்கி சென்றார். இந்த நிலையில் ஓங்கூர் பாலம் அருகே சென்றபோது முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது அரவிந்தின் கார் மோதியது. இதனால் நாராயணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்தி விட்டு ஒன்றும் தெரியாதது போல் அரவிந்த் மீண்டும் சென்னைக்கு வந்து விட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு கார் விழுப்புரம் நோக்கி சென்ற உடனே சென்னை திரும்பியது தெரியவந்தது. இதனால் காரை ஓட்டிய அரவிந்தை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரது காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.