உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில், சீரழிந்த குடும்ப உறவு காரணமாக அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு நபர் தனது மனைவியை மற்றும் மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு, தனது விதவை மாமியாருடன் ஓடியுள்ளார். இது தொடர்பாக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் கோண்டா மாவட்டத்தின் நவாப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தது. பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது “நான் தானேபூர் பகுதியைச் சேர்ந்தவள். கடந்த  2017-ம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி, நவாப்கஞ்சைச் சேர்ந்த இர்ஃபானுடன் முஸ்லிம் மரபின்படி திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.”

திருமணத்தின் பிறகு இர்ஃபானும் அவரது மனைவியும் லக்னோவுக்கு வேலைக்காக இடம் மாறினர். அப்போது லக்னோவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அதே நேரத்தில், மனைவியின் விதவை அத்தை – கார்குபூர் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர் – தன் கணவரின் இறப்புக்குப் பிறகு அவ்வீட்டுக்கு வர ஆரம்பித்துள்ளார்.

முதலில் அந்தப் பெண், “அத்தைக்கு தனது கணவரை இழந்த துக்கம் காரணமாக தான் வந்திருக்கிறார்” என நினைத்திருந்தார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு தனது கணவருக்கும் அத்தைக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி, கள்ளக்காதலாக மாறியது.

அந்தத் தம்பதியர் நான்கு ஆண்டுகளாக அந்த விதவை அத்தையைத் குடும்பத்தில் ஒருவராகவே  நடத்தி வந்ததாக மனைவி கூறுகிறார். சில மாதங்களுக்கு முன்பு மனைவி எதிர்ப்பு தெரிவித்தபோது, இர்ஃபான் தனது மாமியாருடன் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து லக்னோவின் தாகுர்கஞ்ச் காவல் நிலையத்திலும், கார்குபூர் மற்றும் தானேபூர் பகுதிகளில் கூட புகார்கள் அளித்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் எந்த உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

மூன்று குழந்தைகளுடன் தவிக்கும் அந்த பெண் தற்போது கோண்டா மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளார். “எனது குடும்பம் முழுவதுமாக  சீரழிந்துவிட்டது. என் மூன்று பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தயவுசெய்து எனக்கு நீதி வழங்குங்கள்,” என அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் மாமியார்–மருமகன் காதல் விவகாரங்களில் மேலும் ஒரு அதிர்ச்சிகரமான கட்டமாக இருந்து, சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.