விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் பிரம்மாண்டமாக நடந்தது. தனது அரசியல் கொள்கைகள் கோட்பாடுகள், மக்கள் நலன் என அனைத்தைப் பற்றியும் விளக்கமாக பேசினார். பெண்களுக்கான பாதுகாப்பு, இளைஞர்கள் எதிர்காலம் கொடி விளக்கம், அரசியல் தலைவர் முன்னோடிகள் என மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் உணர்ச்சி வசமாக விஜய் பேசினார். விஜய் தவெக கொள்கைகள் பற்றி பேசியுள்ளார்.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா விஜய் ஒரு காலத்திலும் எம்.ஜி.ஆராக முடியாது. அவர் மாநாட்டில் பேசிய பேச்சுகளை பார்த்தால் அவர் தேசியவாதியா இல்லை பிரிவினைவாதியா என்ற சந்தேகம் எழுகிறது. விஜய் தன்னை எம்ஜிஆர் ஆகவும், என் டி ஆர் ஆகவும் நினைத்து கொண்டிருக்கிறார். தேர்தல் முடிவில் அவர் யார் என்பதை மக்கள் அடையாளம் காட்டுவார்கள் என கூறியுள்ளார்.