நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உடற்கூறாய்வு நடந்து முடிந்து உடல் அவரது தந்தை விஜய் ஆண்டனியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்கொலை செய்து கொண்ட விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த ஆறு மாத காலமாக உளவியல் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த நிலையில் இன்று அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளது ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.