தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஆன விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த வாரம் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகமான மன அழுத்தம் காரணமாக அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தி ஒட்டுமொத்த திரை பிரபலங்கள் மட்டுமல்லாமல் முழு இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தற்போது தற்கொலை தொடர்பான விசாரணையில் மீரா இறப்பதற்கு முதல் நாள் இரண்டு மனநல மருத்துவர்கள் சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளார்.

ஆனால் அன்றைய தினம் அனுமதி கொடுக்காத நிலையில் அடுத்த நாள் மீராவை மருத்துவமனைக்கு வருமாறு மருத்துவர் ரிப்ளை மெசேஜ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த மெசேஜ் வரும் போது மீரா நம்மை விட்டுச் சென்று விட்டார். அவரின் தொலைபேசியை தடவியல் வல்லுனர்கள் ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் விஜய் ஆண்டனி தரப்பிலிருந்து இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.