விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி அரசியலில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நேரடியாக அரசியல் கட்சிகளை விமர்சித்து பேசுகிறார். அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஆளும் திராவிட கட்சியை விமர்சித்து விஜய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நேற்று கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் ஆட்சியில் பங்கு கொடுப்போம் என விஜய் கூறியது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் களப்பணியாற்ற வேண்டும். அதற்கு முன்பாக விஜய் அப்படி கூறுவது ஆணவத்தை காட்டுவதாக உள்ளது என விமர்சித்துள்ளார். மேலும் புரிந்து கொள்ளாத வகையில் விஜய் மாநாடு நடத்தியுள்ளார். அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என கூறியுள்ளார்.