
ஐபிஎல் 2025 தொடரின் 17வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில், சிஎஸ்கே அணிக்கு பேட்டிங் முற்றிலும் தோல்வியாக அமைந்தது. 184 ரன்கள் இலக்கை நோக்கி துரத்திய சிஎஸ்கே, தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. ரச்சின் ரவீந்திரா வெறும் 3 ரன்களில் அவுடானதும், பின்னர் ஆட்டத்தின் ஓட்டமே சிஎஸ்கேக்கு சாதகமாக அமையவில்லை.
I wanna be as unbothered as vansh bedi is pic.twitter.com/XaiYy6OuIG
— shruti ✿ (@lostshruu) April 5, 2025
விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்த அந்த நிலையில், டக்அவுட்டில் இருந்த இளம் வீரர் வாஞ்ஷ் பேடி, ரவீந்திர ஜடேஜாவிற்கு அருகில் அமர்ந்தபடியே தூங்கிக்கொண்டிருப்பது கேமராவில் பிடிபட்டது. அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவ, ரசிகர்கள் சிரிப்புடன் அந்த தருணத்தை பகிர்ந்து வருகின்றனர். “அடிக்கடி விக்கெட்டுகள் விழுந்தாலும், டக்அவுட்டில் நிம்மதியாக தூங்குகிற வீரர்!” என வினோதமான மீம்ஸ்களும் உருவாகியுள்ளன.
I wanna be as unbothered as vansh bedi is pic.twitter.com/XaiYy6OuIG
— shruti ✿ (@lostshruu) April 5, 2025
விக்கெட் இழப்புகளால் சோகமாக இருந்த ரசிகர்கள் இந்த காட்சியை சமூக வலைதளத்தில் வைரலாக்கி நகைச்சுவையுடன் பதிவிட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் வாழ்வா சாவா மேட்ச் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி அசந்து தூங்குவதா என்று கேட்டு என்று சிஎஸ்கே அணி வீரரை வறுத்தெடுக்கிறார்கள். மேலும் இந்த போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் சிஎஸ்கே தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.