
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் மடகசிரா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணாச்சாரி(40). இவரது மனைவி சரளா. இந்த தம்பதியினருக்கு சந்தோஷ்(10), புவனேஷ்(8) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு உறவினர்கள் கிருஷ்ணாச்சாரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். ஆனால் நீண்ட நேரமாக அவர் அழைப்பை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு கிருஷ்ணாச்சாரியும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நான்கு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.