வருமான வரி மாற்றங்கள் என்பது ஒவ்வொரு மாத சம்பளக்காரர்களுக்கும் மிகவும் முக்கியமானது, வருடத்தின் ஆரம்பத்திலேயே ஒருவருடைய வருமானத்தை கணக்கிட்டு வரி சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வது அவசியம், இல்லையெனில் வருடத்தின் இறுதியில் தேவையில்லாத டென்ஷன், வரிக்காக பணத்தை இழக்க நேரிடும். இந்நிலையில் வருமான வரித்திட்டத்தில் பல மாற்றங்கள் வர இருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது.

இதனை தனது X பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது முற்றிலும் தவறான தகவல் என்று மறுத்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் இப்படியான பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் என்று நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம், வருமான வரி உயரப்போவதாக வந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்