தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தாண்டூர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெய் சிங் ( 28 வயது) என்பவரின்  மனைவி சுமித்ரா பாய் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை தாமதமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் கடுமையான வயிற்று வலியின் காரணமாக உறவினர்கள் சுமித்ராவை அழைத்து சென்ற நிலையில் 9 பணிக்கு தான் செவிலியர்கள் வந்து பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் கர்ப்பிணி பெண்ணின் நிலைமை மோசமடைந்து உயிரிழந்துவிட்டார். மேலும் இந்த மரணத்திற்கு மருத்துவமனையின் அலட்சியம்தான் காரணம் என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.