உத்தரபிரதேச மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்தது. இன்று காலை, சுல்தான்பூரிலிருந்து லக்னோவுக்குச் சென்று கொண்டிருந்த அந்த டேங்கர், வாரணாசி – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கதோரா அருகே வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர வயலில் கவிழ்ந்தது. லாரி கவிழ்ந்ததையடுத்து அதன் மேல் பகுதி பாதிக்கப்பட்டு எண்ணெய் வெளியேறத் தொடங்கியது. இதனை கண்ட மக்கள், உடனடியாக வாளி மற்றும் கேன்கள் கொண்டு ஓடி வந்து, சேற்றில் கலந்த எண்ணெயை வடிகட்டி எடுத்துச் செல்ல ஆரம்பித்தனர்.

 

 

இந்த சம்பவம் நடைபெறும் போது, அந்த பகுதி மக்கள் எண்ணெய் சேற்றில் கலந்து  வீட்டு நிலையிலும் கேன்கள் மற்றும் பெட்டிகள் கொண்டு எண்ணெயை நிரப்பி வீடுகளுக்கு எடுத்துச் சென்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வீடியோவாக பதிவாகி, தற்போது வைரலாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் இடையே பரபரப்பும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. மேலும், அந்த எண்ணெய் தீ விபத்தை ஏற்படுத்தவும் அபாயம் இருந்ததாகவும், பொது மக்களின் அஜாக்கிரதையை வெளியிடுவதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் டேங்கர் ஓட்டுநர் சிறிது காயமடைந்து, அருகிலுள்ள ஜெகதீஷ்பூர் ட்ராமா சென்டரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், எண்ணெய் எடுத்துச் செல்ல முயன்ற கிராம மக்களை அப்புறப்படுத்தினர். மேச தற்போது சம்பவ இடத்தில் போக்குவரத்து வழக்கமாக நடைபெறுவதாகவும், இதுபோன்ற அவசர நிலைகளில் பொதுமக்கள் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் கமரூலி காவல் நிலைய பொறுப்பாளர் முகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.