இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூன்று வகையான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முன்னதாக தெரிவித்திருக்கிறார். தற்போது வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. 24 மாநிலங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில், 27 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில்,படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில், விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது