வட்டிவிகிதம்  குறைக்கப்படுமா? RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ்சிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து பேசிய அவர் வட்டி விகிதம் குறைக்கப்படுவது குறித்து இப்போதே பேச முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவுக்கு பின் பணவீக்கம் அதிகரித்ததால், அதனை கட்டுக்குள் கொண்டு வர வட்டிவிகிதம் அதிகரிக்கப்பட்டது.

தற்போது பணவீக்கம் 5 சதவீதமாக குறைந்திருக்கும் நிலையில் மக்கள் வட்டி விகித குறைப்பை எதிர்பார்க்கின்றனர். ஆனால், 4 சதவீத இலக்கை அடைந்தபின் வட்டியை குறைப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.